தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-22 : முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-22 : முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-22 : முக்கிய அம்சங்கள்

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கியம் அம்சங்கள் இதோ.

  • தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு 75%ஆக உயர்த்த நடவடிக்கை
  • இருபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை
  • உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது

  • தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை

  • சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்

  • சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்

  • ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை

  • தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி உயர்த்தப்படும்

  • உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம்

  • உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்பு திட்டம்
  • வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்
  • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ.10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
  • கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்
  • தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்
  • தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
  • 2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு
  • வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்
  • பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
  • தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்
  • பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்
  • 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம்
  • 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள்
  • இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68கோடியில் ஒன்றிய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும்
  • ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்
  • முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும்; இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு
  • 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு
  • கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்
  • அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி
  • கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2கோடி ஒதுக்கீடு
  • இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் ஒன்றிய - மாநில நிதியில்செயல்படுத்தப்படும்
  • ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்
  • பழப்பயிர் சாகுபடிக்காக ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கீடு
  • பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
  • அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்
  • ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70லிருந்து 100ரூபாயாக உயர்த்தப்படும்
  • மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தளைகள் 2லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
  • மூலிகை செடிகளை பெருக்கும் திட்டத்திற்கு ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
  • 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம்
  • மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள்
  • சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்
  • சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானியத்திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
  • 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு
  • துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றை 61ஆயிரம் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய திட்டம்
  • விவசாயத்திற்கான இலவச மின்சார திட்டத்திற்காக மின்வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்
  • நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்காக ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்
  • ரூ.1லட்சம் செலவில் 100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க  ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.39 கோடி ஒதுக்கீடு
  • கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்
  • கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2900 ஆக உயரும்
  • அரவை பருவத்தில் 1 டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு ரூ.150 வழங்கப்படும்
  • தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை, திருப்பூர் மாவட்டங்கள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்
  • 15 மாவட்டங்களில் ரூ.3.5 கோடியில் 28 உலர் களங்கள் அமைக்கப்படும்
  • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்
  • விளைபொருட்கள் அழுகாமல் பாதுகாக்க பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 கோடியில் குளிர்பதன் கிடங்குகள் அமைக்கப்படும்
  • உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை, உழவர்விலை அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்
  • கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
  • கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும்
  • ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும்
  • பட்ஜெட்டில் வேளாண்மை, சார்புத்துறைகளுக்கு ரூ.34,330.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com