“காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை”- திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

“காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை”- திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
“காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை”- திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விளைவித்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்ட போதிலும் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்தும், விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின்போது வெண்டைக்காய், எலுமிச்சம் பழம் உள்ளிட்டவற்றை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும்போது “ஏற்கெனவே விவசாயிகள், வாங்கிய கடனை கட்ட முடியாமல் இருந்து வரும் நிலையில் தற்போது விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால் சென்னையை நோக்கி தனி மனித இடைவெளியுடன் விவசாயிகள் பேரணியாக சென்று போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com