விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18-ம் தேதி சென்னையில் திமுக தோழமை கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச.18 காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் திமுக தோழமை கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகளுக்கும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் இந்த போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதாரவிலையே இல்லாத சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய கொண்டுவரப்படும் சட்டத்தையும் திரும்பப்பெற பாஜக அரசு முன்வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் சார்பாக வள்ளுவர்கோட்டம் அருகே இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com