விவசாயிகளை கொலைகாரர்களாக சித்தரிப்பதா? : முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி

விவசாயிகளை கொலைகாரர்களாக சித்தரிப்பதா? : முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி

விவசாயிகளை கொலைகாரர்களாக சித்தரிப்பதா? : முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி
Published on

விவசாயிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கொலைகாரர்களாக சித்தரிக்கக் கூடாது என்று, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடர்பாக மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்தியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் “ ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக திருவாரூரிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அவ்வாறு டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தமிழக அரசு கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்திருப்பது என்பது தமிழக அரசின் விவசாயிகளை கொலைக்காரர்களாக சித்தரிக்கும் போக்கு. தமிழக முதலமைச்சர் திட்டமிட்டு விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் உள்ள உறவை சீர்குலைக்கும் முயற்சிதான் இது, இந்த போக்கை தமிழக அரசு கைவிடவேண்டும்” என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com