விவசாய பம்புசெட் மின் இணைப்பு... காலக்கெடுவை நீட்டிக்க டிடிவி தினகரன் கோரிக்கை

விவசாய பம்புசெட் மின் இணைப்பு... காலக்கெடுவை நீட்டிக்க டிடிவி தினகரன் கோரிக்கை

விவசாய பம்புசெட் மின் இணைப்பு... காலக்கெடுவை நீட்டிக்க டிடிவி தினகரன் கோரிக்கை
Published on

விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை தமிழக அரசு சரிசெய்து கொடுக்காத நிலையில்,அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளால் மின்மோட்டாருக்கு விண்ணப்பிக்க இயலவில்லை.

நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டர் தூரம் இருந்தால்தான் விவசாய பம்பு செட்டுக்கான தடையில்லா சான்றிதழ் பெறமுடியும் என்ற விதிமுறையை 50 மீட்டராக குறைப்பதோடு, இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் பட்டியலில் இருந்து வடிகால்களை அகற்ற வேண்டும். விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com