நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கு: விளைநிலத்தில் கிரிக்கெட் விளையாண்ட விவசாயிகள்

நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கு: விளைநிலத்தில் கிரிக்கெட் விளையாண்ட விவசாயிகள்
நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கு: விளைநிலத்தில் கிரிக்கெட் விளையாண்ட விவசாயிகள்

கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அழுகிய நெற்கதிர்களை பந்துகளாக செய்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் மனு வழங்குவது போல் விவசாயிகள் பந்து வீசினர். வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வந்த மனுக்களை திருப்பி அனுப்புவது போல் பந்துகளை சிக்சர் அடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்தவாசி தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட்ட நெல், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டது. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com