கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர், சிவகங்கை ஆகிய மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கையில் 1 இடத்திலும் வேலூரில் 25 இடங்களிலும், கிருஷ்ணகிரியில் 3 இடங்களிலும், திருப்பத்தூரில் 13 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.