இன்றைய காலை தலைப்புச் செய்திகளில் இன்று கையெழுத்தாகும் காஸா அமைதி ஒப்பந்தம் முதல் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய தவெக வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
காஸாவில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த குண்டுமழை நின்றிருக்கிறது. காஸாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு..
காஸா அமைதி ஒப்பந்தம் குறித்து எகிப்தில் உலகத்தலைவர்கள் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தவிருக்கும் நிலையில், அதற்கு ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.