மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு மெகா விருந்து பரிமாறப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 5 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.