சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் சிலை முன் இருந்த துவாரபாலகன் சிலைகள் மற்றும் தங்க தகடுகளில் 4 கிலோ தங்கம் மாயமாகியிருந்த நிலையில் தற்போது கொடிமரம் நிறுவியதிலும் தங்க திருட்டு நடந்திருக்கிறது .
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் சிலைகளை தொடர்ந்து, கருவறையைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்திலும் தங்கக் கொள்ளை நடந்திருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.