"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்

"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்

"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்

மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக கங்கனா ரனாவத் இத்தகைய கருத்தை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சலோனி கவுர் என்ற நகைச்சுவை நடிகை, கங்கனா ரனாவத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி என மூன்று பேர் என நக்கலாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நீண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார் கங்கனா.

அந்தப் பதிவில் "என்னுடைய தாத்தாவுடன் பிறந்தவர்கள் 8 பேர். அப்போது நிறைய குழந்தையை பெற்றுக் கொள்வார்கள். அதில் பலரும் இறந்தும் போவார்கள். அப்போது காட்டில் வசித்ததால் ஆபத்தும் அதிகம். ஆனால் நாம் அப்போது இருப்பதுபோலவே இப்போதும் இருக்க முடியுமா என்ன? காலத்திற்கு ஏற்றார்போல நாம் மாற வேண்டும். இப்போது நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும். அதற்கு சீனாவில் இருப்பது போல கடுமையான சட்டங்கள் தேவை" என கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com