மே-2 தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8.30க்கு தொடங்கும் : சத்யபிரதா சாகு

மே-2 தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8.30க்கு தொடங்கும் : சத்யபிரதா சாகு
மே-2 தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8.30க்கு தொடங்கும் : சத்யபிரதா சாகு

தமிழகத்தில் மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக 8 மணிக்கே தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் இம்முறை நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படுவதால் காலை 8.30 மணிக்கு தான் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவித்தார்.

தபால் வாக்குடன் , வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ண தொடங்கப்படும் என அவர் கூறினார். வாக்கு பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இதுவரை எந்த தவறும் நிகழவில்லை என தெரிவித்தார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளதாக தெரிவித்த அவர் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com