“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை

“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை

மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவையும் ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் அசாம், தமிழ்நாடு, கேரளா - மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவுபெற்றுவிட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமே இன்னும் 4 கட்டங்கள் வாக்குப்பதிவு நடத்தவேண்டிள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் சூழலில் மேற்கு வங்கத்தில் இன்னும் நடைபெறவுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவினை ஒரே நாளில் நடத்த மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தல்களைக் நடத்துவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com