ஸ்ட்ராங் ரூம் பின்பகுதியை கண்காணிக்க கரூர் திமுக வேட்பாளர் கோரிக்கை

ஸ்ட்ராங் ரூம் பின்பகுதியை கண்காணிக்க கரூர் திமுக வேட்பாளர் கோரிக்கை
ஸ்ட்ராங் ரூம் பின்பகுதியை கண்காணிக்க கரூர் திமுக வேட்பாளர் கோரிக்கை

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின் பகுதியை கண்காணிக்க கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரசாந்த் வடநேரேவுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்... " கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த கட்டடத்தின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் கட்டடத்தின் பின்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவில்லை. கட்டடத்தின் பின் பகுதிக்குள் யாரேனும் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின்பகுதியை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com