சத்தியமங்கலம் அருகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற அதிகாரிகளின் வாகனத்தை காட்டு யானை வழிமறித்து நின்றது.
பவானிசாகர் தொகுதியில் அடர்ந்த மலைப்பகுதியில் உள்ள கோட்டமாளத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களுடன் அதிகாரிகள், கோபிசெட்டிபாளையம் நோக்கி பயணத்தைத் தொடங்கினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆசனூர் சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று குட்டியுடன் நின்றுகொண்டிருந்தது. 2 மணி நேரம் வரை அந்த தாய் யானையும் குட்டியும் நகராமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன. இதனால் அதிகாரிகளால் அந்த இடத்தை விட்டு முன்னேற முடியாமல் போனது.
2 மணி நேரத்துக்குப் பின் மனமிறங்கிய காட்டுயானை தனது குட்டியுடன் காட்டுக்குள் திரும்பியது. இதற்காக காத்துக் கொண்டிருந்த அதிகாரிகள் தங்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு கோபிசெட்டிபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றடைந்தனர்.
Loading More post
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்