தமிழகத்தில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் 3,986 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3,972, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 14 பேர் என மொத்தம் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
80,535 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரே நாளில் தொற்று 3,986 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 17 பேர் இறந்துள்ளது. இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது.