புதுச்சேரி: காணாமல் போன ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்பு

புதுச்சேரி: காணாமல் போன ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்பு
புதுச்சேரி: காணாமல் போன ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்பு

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மடி காணாமல் போன நிலையில், கோதாவரி ஆற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஏனாம் தொகுதியில், என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து துர்கா பிரசாத் பொம்மடி உள்ளிட்ட 14 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த சூழலில் சுயேச்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மடி கடந்த ஒன்றாம் தேதி காணாமல் போனார்.

இதுதொடர்பாக அவரது மனைவி ஏனாம் காவல் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், துர்கா பிரசாத் பொம்மடி, கோதாவரி ஆற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக அவர், ஏனாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கடத்திச்சென்று தாக்கியது யார் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com