கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி

கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி
கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியமைக்கும் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:

கேள்வி: உங்கள் பரப்புரைக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?

பதில்: தெருக்களில் மக்கள் கூடுகின்றனர். ஆதரவு முழக்கம் எழுப்புகின்றனர். எங்களை வரவேற்கின்றனர். அதிமுக அணி மீண்டும் ஆட்சியமைத்து வளர்ச்சியை தர வேண்டும் என விரும்புகின்றனர்.

கேள்வி: தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்து கணிப்புகள் உங்களுக்கு சாதகமாக இல்லையே?

பதில்: எல்லாருமே கருத்து கணிப்பு நடத்துகின்றனர். ஆனால் இங்கு கூடியுள்ள கூட்டமே தேர்தல் முடிவு என்ன எனச் சொல்லும்.

கேள்வி: தங்கள் தேர்தல் பணிகளை முடக்க வருமான வரி சோதனை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே?

பதில்: நல்ல செயல்கள் செய்தவர்களுக்கு எந்த கெடுதலும் வராது. தவறு செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். சட்டம் தன் கடமையை செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com