தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது: கமலிடம் கேள்வியெழுப்பிய இளைஞர்

தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது: கமலிடம் கேள்வியெழுப்பிய இளைஞர்
தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது: கமலிடம் கேள்வியெழுப்பிய இளைஞர்

தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பார்த்து இளைஞர் எழுப்பிய கேள்வியால் பரப்புரைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை பறிபோய் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை தர முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தமிழகத்தில் தமிழர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்றும், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், அந்தந்த பகுதியில் 100 கிலோமீட்டருக்குள் வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com