ஓபிஎஸ் பேசும்போது கலைந்து சென்ற பொதுமக்கள் - அதிர்ச்சியடைந்த அதிமுகவினர்!

ஓபிஎஸ் பேசும்போது கலைந்து சென்ற பொதுமக்கள் - அதிர்ச்சியடைந்த அதிமுகவினர்!
ஓபிஎஸ் பேசும்போது கலைந்து சென்ற பொதுமக்கள் - அதிர்ச்சியடைந்த அதிமுகவினர்!

ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே பொதுமக்கள் கலைந்து சென்றதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு, தெற்கு காங்கேயம் மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அதிமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றதால் மேடையிலிருந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் துணை முதல்வர் பேசி முடிப்பதற்கு முன்பாகவே நாற்காலிகள் காலியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com