அடிபட்ட புலி போன்று சினம் கொண்டு எழுவேன் - மம்தா பானர்ஜி ஆவேசம்

அடிபட்ட புலி போன்று சினம் கொண்டு எழுவேன் - மம்தா பானர்ஜி ஆவேசம்
அடிபட்ட புலி போன்று சினம் கொண்டு எழுவேன் - மம்தா பானர்ஜி ஆவேசம்

அடிபட்ட புலி மிகவும் ஆபத்தான விலங்கு என்பதைப்போன்று தான் சினம் கொண்டு எழுவேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நந்திகிராமில் தேர்தல் பரப்புரையின்போது கீழே தள்ளப்பட்டதால் காயமடைந்ததாக கூறிய மம்தா பானர்ஜி, மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கொல்கத்தாவில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தூய்மையற்ற சக்திகள் அழிக்கப்பட்டு, நல்லவை மேலோங்கட்டு்ம் என்று கூறினார்.

மேற்கு வங்க மக்கள் மீண்டும் தங்களுக்கு வாக்களித்தால், ஜனநாயகம் அவர்களிடம் திரும்புவதை உறுதி செய்வோம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேற்கு வங்கத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழித்தொழிக்கப்படும் என மம்தா கூறினார். காயமுற்ற காலுடன் மாநிலம் முழுவதும் சுற்றிவந்து பரப்புரையில் ஈடுபடுவேன் என மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com