விஜய் ஹசாரே கோப்பையை மும்பை அணி வென்றுள்ளது.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நடத்தப்படுகின்ற பிரதான தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை. 38 அணிகள் ஆறு பிரிவுகளாக இதில் பங்கேற்று விளையாடின. அதில் மும்பை அணியும், உத்தரபிரதேச அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றிருந்தது. டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 312 ரன்கள் குவித்திருந்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு பிருத்வி ஷா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு 89 ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர். பின்னர் மும்பை அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஆதித்திய தாரே 107 பந்துகளில் 118 ரன்கள் விளாசினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.
மும்பை அணி 41.3 ஓவர்களில், 4 விக்கெட் இழந்து 315 ரன்களை குவித்து வெற்றி பெற்றிருந்தது.
இந்த;j தொடரில் மும்பை அணியின் கேப்டன் பிருத்வி ஷா 827 ரன்கள் குவித்து அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உத்தர பிரதேச அணியின் பந்து வீச்சாளர் ஷிவம் ஷர்மா 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.