விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய இங்கிலாந்து நீதிமன்றம் : சீமான் மகிழ்ச்சி

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய இங்கிலாந்து நீதிமன்றம் : சீமான் மகிழ்ச்சி
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய இங்கிலாந்து நீதிமன்றம் : சீமான் மகிழ்ச்சி

பிரிட்டனை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பிரித்தானியா நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட இனமானத் தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தடை நீக்கத்தை முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம். தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com