48 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

48 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
48 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 48 பேரையும், அவர்களது 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 48 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள மீனவர்கள், இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 48 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே கைதான 36 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன. கைதான மீனவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com