
கரூர் அருகே மாயனூரில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், கோவையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக கரூர் அருகே மாயனூரில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் முத்துகிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து மாயனூர் காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.