வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட் பிரச்னையால் இடம் கிடைக்காத அனுபவம் அனைவருக்கும் இருந்திருக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.