கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நோயாளிகளுக்கு மன ஆறுதல் தர அன்பின் கரங்கள் என்ற வித்தியாசமான நடைமுறை பிரேசில் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது என்ன? இப்போது பார்க்கலாம்
கொரோனா என்ற கொடூர அரக்கனுடன் மனித குலம் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வரும் போரில் நெகிழவும் உருகவும் வைக்கும் ஏராளமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்று பிரேசில் நாட்டில் தற்போது நடந்துகொண்டுள்ளது. கொரோனா தொற்றுடன் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் நபர்கள் அவரவர் மனைவி, தந்தை, தாய், மகன், மகள் என நெருங்கி உறவுகள் அருகில் இருக்க விரும்புகின்றனர். ஆனால் உயிர் பயத்துடன் சின்னஞ்சிறிய அறையில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
இதற்கு தீர்வு காண பிரேசில் நாட்டின் சா கார்லோஸ் என்ற சிறிய ஊரில் உள்ள இரு செவிலிகள் ரப்பர் கையுறையில் மிதமானவெப்பம் உள்ள தண்ணீரை நிரப்பி அதை நோயாளிகளுடன் கையுடன் கோர்க்குமாறு செய்கின்றனர். இதனால் தங்களுக்கு நெருங்கியவர்களுடன் கைகோர்த்திருப்பதை போன்ற உணர்வு நோயாளிகளுக்கு கிடைக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு மன ரீதியான ஆறுதல் கிடைப்பதுடன் மருத்துவ ரீதியாகவும் வேறு சில பலன்கள் கிடைப்பதாக அந்த செவிலிகள் கூறுகின்றனர். அன்பின் கரங்கள் என அழைக்கப்படும் இந்த வினோத யுக்தி பலன் தருவதை கண்டு பிரேசிலில் மற்ற மருத்துவமனைகளும் இதே பாணி சிகிச்சையை கையாள தொடங்கியுள்ளன.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!