சேலத்தைச் சேர்ந்த பிரபல சித்திரக் கலைஞர் பசுபதிநாதன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் உள்ள சுவர்களை பொன்மொழிகளால் அலங்கரிப்பதை கடந்த 25 ஆண்டு கால சேவையாக செய்து வந்தவர் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபல சுவர் சித்திரக் கலைஞர் பசுபதிநாதன். இவர், சேலம் மாநகரில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுவர்களில் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை வாரம் தோறும் எழுதி பொதுமக்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வந்தவர்.
தற்கொலை செய்து கொள்ள ஒரு நொடி துணிச்சல் போதும்; தன்னம்பிக்கையோடு வாழ ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும் என்பன போன்ற பல்லாயிரக்கணக்கான பொன்மொழிகளை தனது சுவர் சித்திரம் மூலம் பொதுமக்களிடையே கொண்டு சேர்த்த பசுபதிநாதன் பிரபல திரைப்பட இயக்குனர் சசிகுமார் (பூ, பிச்சைக்காரன் பட இயக்குனர்) உள்ளிட்ட பலரது வாழ்வியல் மாற்றங்களுக்கும் விதையாக இருந்துள்ளார்.
பிரதிபலன் பாராமல் எம்எம்எம் கார்னர் என்ற பெயரில் பொன்மொழிகளை எழுதி பல்லாயிரக் கணக்கானவர்கள் மனதில் முகம் தெரியாமல் முத்திரை பதித்த பசுபதிநாதன் எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பசுபதிநாதன் உயிரிழந்த தகவல் அறிந்த சேலம் மாநகர மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர். வாரம் தோறும் புதுப்புது பொன்மொழிகளால் 25 ஆண்டுகாலம் தொடர்ந்த வாசகங்களுக்கு, பசுபதிநாதனின் உயிரிழப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
Loading More post
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்