நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 6 தமிழக அமைச்சர்களைக் கொண்ட குழுவினர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் இல்லத்தில் சந்தித்து நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாதாடிக் கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரினோம். எங்கள் கோரிக்கையை அவர் கனிவுடன் பரிசீலிப்பதாகவும், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார் எனத் தெரிவித்தார். அதேபோல், தமிழக மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னதாக, தமிழக அமைச்சர்கள் குழுவினர் முதலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அவரும் தமிழக குழுவினருடன் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!