நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மைநிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட எஸ்தர் ராணி என்பவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட உறவினர்கள் செவிலியர்களிடம் தகவல் அளித்தனர். செவிலியர்கள் பரிசோதனை செய்ததில் எஸ்தர் ராணி உயிரிழந்தது தெரியவந்தது.
அருகில் மற்ற படுக்கைகளில் இருந்த நோயாளிகளும் மூச்சு திணறலால் அவதியடைந்ததை கண்ட உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்சிஜன் பற்றாக்குறையாலேயே எஸ்தர் ராணி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயரிடம் கேட்டதற்கு உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!