அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் கடலூர் கிழக்கு மாவட்டத்திலிருந்து 6 பேரை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, கடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலரும், பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சத்யா பன்னீர்செல்வம்,பண்ருட்டி நகரமன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், எம். பெருமாள், மார்ட்டின் லூயிக், சௌந்தர் மற்றும் ராம்குமார் ஆகியோர் இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புமுதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள்மீது அதிமுக வேட்பாளருக்கு எதிராகவும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதால் கட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com