திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கே அனுமதி: புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கே அனுமதி: புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கே அனுமதி: புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளை விதித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

அதில், இரவு 12 முதல் காலை 5 மணி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இரவு 8 மணி வரை மட்டுமே கோயில்கள் திறந்திருக்கும். திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் பயணிக்க கூடாது. மக்கள் ஒன்றாக கூட, திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, வாடகைக்காரில் 2 பேர் மட்டுமே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியவில்லையென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com