ஆவடியில் தேர்தல் அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஆவடியில் அதிமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நாசர் , சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பணிக்குழு அதிகாரி சங்கிலி ரதி, அதிமுகவினர் கொடுக்கும் புகாரை விசாரிக்காமல் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் தெரிவித்தும். பரப்புரையின் போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் கூறி திருமுல்லைவாயில் காவல்நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சங்கிலி ரதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை ஆவடி உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தார். தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Loading More post
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்