பனைமர தொழிலாளர்கள் மீது தொடர்ந்து போலீசார் பொய் வழக்கு போடுவதால், அதைக் கண்டித்து நரசிங்கனூர் பனைத் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கனூர், பூரிகுடிசை பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பனைமர தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கோடை காலங்களில் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்கி பனை வெல்லம் தயாரிப்பது இவர்களுடைய தொழில்.
இந்நிலையில், பதநீர் இறக்கும் தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்து சாராய வழக்கு போடுவதாக இவர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து நேற்று 5 பேரை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக, அந்த நடவடிக்கையைக் கண்டித்து, வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்