தேசிய விருதுகளைக் குவித்துள்ள தனுஷின் ‘அசுரன்’ படம் ஜப்பானில் நடந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான ’அசுரன்’ வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவல் கதையை திரையில் காட்சிகளாக ரசிக்க வைத்தார் வெற்றி மாறன்.
தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு அசுரன்’ என்றே புகழத் தொடங்கினார்கள்.’சிவசாமி’ என்ற கேரக்டரில் தனுஷ் வாழ்ந்தார் என்றே பலரும் பாராட்டினர்.
மிக முக்கியமாக சிறந்த தமிழ் மொழி படமாக தேசிய விருதுக்கு "அசுரன்" தேர்வானது. மேலும் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் நேற்றும்,நேற்று முன்தினமும் நடந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிடப்பட்டது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இவ்விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர் உள்ளிட்டப் பிரிவுகளில் அசுரன் படம் விருதுகளை அள்ளியுள்ளது.
கைதி, சில்லுக் கருப்பட்டி உள்ளிட்டப் படங்களுக்கும் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்