தமிழக அரசின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தமக்கு தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நீட் தேர்வு மசோதா பற்றி தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி வருவதாக கூறினார். மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளித்தபோது தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாடத்திட்டம் மாற்றம் செய்ய கூடுதலாக அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவதை விடுத்து, மாணவர்களைத் தயார் செய்யும் ஆக்கப்பூர்வ பணியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!