ஆந்திராவில் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணபுரத்தில் உள்ள மண்டல் பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோடேஸ்வர ராவ். சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மது அருந்தியபடியும் உணவருந்தியபடியும் இருக்கும் இவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது. கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோடேஸ்வர ராவ் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியது நிரூபணமானது. இதையடுத்து கோடேஸ்வர ராவை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புகாருக்குள்ளான ஆசிரியர் கோடேஸ்வர ராவ் தினமும் பள்ளியில் வைத்து மது அருந்துவார் என்றும் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வார் என்றும் மாணவர்கள் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதையடுத்து கோடேஸ்வர ராவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி