வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கொரோன தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அடுத்த சில வாரங்களில் நேச நாடுகளுக்கு படிப்படியாக தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் ஆற்றல், தேசிய தடுப்பூசி திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தடுப்பூசி வினியோகத்தை கட்டமைக்க வேண்டியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும்போது உள்நாட்டு தேவையையும் கருத்தில் கொள்ளவேண்டி இருப்பதால் அதற்கேற்ப மாறுபடும்.
இந்தியா வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. இது வரை உலகெங்கும் உள்ள 75 நாடுகளுக்கு சுமார் 60 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது. வரும் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்