‘கஜா புயலுக்கு கரண்டாகவும், கொரோனாவிற்கு மருந்தாகவும் ஓடிவந்து உதவிக்கரம் நீட்டியவன் நான், என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை விராலிமலை தொகுதிக்காக உழைப்பேன்’ என்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். பிரச்சாரத்தின் போது ஒரு ஆண் குழந்தைக்கு விஜயபாஸ்கர் என்றும் அவர் பெயர் வைத்தார்.
விராலிமலை தொகுதிக்குட்பட்ட பேராம்பூர், செங்களக்குடி, ஆவூர், புதுப்பட்டி, ஆம்பூர் நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் விஜயபாஸ்கர் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விராலிமலை தொகுதிக்கு உழைத்துள்ளேன்.
பல்வேறு மகத்தான திட்டங்களை கொண்டு வந்திருப்பது இந்த மண்ணுக்கும் இங்குள்ள பெண்களுக்கும் தெரியும். பல்வேறு இக்கட்டான காலகட்டத்தில்தான் உழைத்தேன். அது இந்த பூமிக்கும் அந்த சாமிக்கும் தெரியும். உயிருள்ளவரை இந்த விராலிமலை தொகுதிக்காக உழைப்பேன்” என்றார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்