தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1500-ஐ நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 1437 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1428 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 9 பேர் என 1437 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
76,128 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரேநாளில் தொற்று எண்ணிக்கை 1,437ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மேலும் 9 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 9,145ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 466 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!