தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வரை சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி, நேற்றுமுன்தினம் வரை நடைபெற்ற சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 99 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், சேலை, மடிக்கணினி, குக்கர் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் மட்டும் ஒரே நாளில் 48 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 900 லிட்டர் மதுபானங்களும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!