வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவது அதிமுகவிற்கு சாதகமான விஷயம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் முத்துமாரியம்மன் கோயிலில் கூட்டாக வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்காமல் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றி. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவது அதிமுகவிற்கு நல்ல விஷயம். பலமுனை போட்டியாக களம் இறங்கும் போது எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து அதிமுக அமோக வெற்றி பெறும். மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார்” என்றார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்