இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுமா இந்திய அணி?... ஆஸி.,க்கு எதிராக பேட்டிங் தேர்வு

இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுமா இந்திய அணி?... ஆஸி.,க்கு எதிராக பேட்டிங் தேர்வு
இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுமா இந்திய அணி?... ஆஸி.,க்கு எதிராக பேட்டிங் தேர்வு

மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

டெர்பி நகரில் பெய்த மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, போட்டி 42 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், பேட்டிங் தேர்வு செய்தார். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி உள்பட டெர்பி மைதானத்தில் நடந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. அதே நேரம், லீக் போட்டிகள் அனைத்திலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com