நடிகர் ரஜினிகாந்த் கொள்கை ரீதியாக தூய்மையான அரசியல் வரவேண்டும் என்ற நோக்கத்துடன் குரல் கொடுத்தவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதே நேரம், கடந்த ஆண்டு வரை கூட நடிகர் கமல் சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறும்போது, ’அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? திரைத்துறையில் இருந்தாலும் ரஜினி போல சமூகக் கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூகக் கருத்துகளை பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக பேசாமல் தற்போது பேசுவது ஏன்? கமல் இந்தி படத்தில் நடித்தவர்தான். அதை வைத்து ஆதாயம் ஈட்டியவர்தான். இந்தி எதிர்ப்பிற்காக குரல் கொடுத்தேன் என்று கூறுவது ஏன்? கமல்ஹாசன் இப்போது புனிதமடைந்து விட்டதாகப் பேசக்கூடாது. யாராக இருந்தாலும் இணைய தளத்தில் பேசக்கூடாது. களத்திற்கு வரட்டும்’ என்றார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!