தமிழக சட்டப்பேரவைக்குள் குட்காவை கொண்டுவந்து காண்பித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது அவை உரிமை மீறல் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் குட்கா எனப்படும் போதைப்பொருள் தங்கு தடையின்றி விற்கப்படுவதாக கூறி அவற்றை பேரவையில், ஸ்டாலின் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்ஏக்கள் காண்பித்தனர். இந்த பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டு வந்ததற்காக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது அவை உரிமை மீறல் புகார் எழுப்பப்பட்டது. அப்போது, தடை செய்யப்பட்ட பொருள் எவ்வாறு கிடைத்தது என திமுகவினரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் விற்பனை பற்றி காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியதுதானே என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதேநேரத்தில் குட்கா விற்பனை பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் காவல்துறையே குட்கா விற்பனைக்கு துணை போகிறது என்றார்.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix