சாதி மத பேதமின்றி ஜல்லிக்கட்டை சமத்துவ விளையாட்டாக கொண்டாட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் எந்தவித பேதமுமின்றி தமிழினப் பற்று மட்டுமே மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அமைதி வழி அறப்போரின் முடிவில் பல இளைஞர்கள் ரத்தம் சிந்தும் அளவிற்கு காவல்துறை தடியடி நடத்தியிருப்பதாகவும் வாகனங்களுக்கு காவலர்களே தீவைக்கும் கொடுமை என பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் மக்கள் எழுச்சியால் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடந்த பல ஊர்களில் கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஜல்லிக்கட்டு உரிமையைப் பெற்றுத் தந்துள்ளதாகவும் சாதிமத பாகுபாடுகள் இன்றி நடைபெறும் சமத்துவ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியே மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?