சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய ஆயுதப் படையினர் தமிழகம் வருகின்றனர்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் பரப்புரைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக விருப்பமனு பெறும் பணிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணப்படும் இடங்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கட்டமாக தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.
இதனால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்காக பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய ஆயுதப்படையினர் தமிழகம் வருகின்றனர். முதல் கட்டமாக ஆயுதப்படையின் 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வருகின்றனர்.
வழக்கமாக மத்திய ஆயுதப்படையினர் தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் குறிப்பிட்ட மாநிலத்திற்கு செல்வார்கள். ஆனால் தற்போது தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவர்கள் தமிழகத்திற்கு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
Loading More post
பெங்களூருவில் பிரதமர் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலைகள்.. ஒரே வாரத்தில் பரிதாப நிலை!
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
27 வருடத்திற்குப் பிறகும் அதே எனர்ஜி.. ‘சக்கு சக்கு’ பாடலை ரீ-கிரியேஷன் செய்த மன்சூர்!
மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி