முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்குமோ என்பது குறித்த விசாரணை வழக்கை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
கோகோய் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக சொல்லி, கடந்த 2019இல் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அதை தற்போது முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் “வழக்கு தொடர்பான மின்னணு ஆவணங்களை மீட்பதில் சாத்தியக் குறைவு உள்ளதால் வழக்கை முடித்து வைக்கிறோம்” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.
முன்னாள் நீதிபதி பட்நாயக் குழுவினால் வாட்ஸ்அப் செய்திகள் போன்ற மின்னணு ஆவணங்களை மீட்க முடியாததால் இந்த விசாரணை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2014-இல் உச்ச நீதிமன்றத்தில் வேலைக்காக சேர்ந்த பெண் ஒருவர் 2018-இல் நீதிபதி கோகாய் வீட்டில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தபோது தன்னை பாலியல் ரீதியாக சீண்ட முயற்சித்ததாகவும், அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த பெண் கோகாய் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது நீதிபதி கோகாய் மீது திணிக்கப்பட்ட மிகப்பெரிய சதித்திட்டம் என வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!