நீலகிரியில் 2 மாதங்களுக்கு பிறகு பிடிபட்ட காட்டு யானை சங்கர், கும்கி யானைகள் உதவியுடன் முதுமலை கொண்டு செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணி 7 வது நாளாக நேற்று தொடர்ந்தது. கூடுதலாக வரவழைக்கபட்ட வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சங்கர் யானை கூட்டத்துடன் நின்ற 10 லைன் வனப்பகுதியில் மரத்தின் மீது பரண் அமைக்கப்பட்டது. மரத்தின் அடியில் பழங்களை கொட்டி வைத்து, மருத்துவர்கள் பரண் மீது அமர்ந்து காத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வனத்துறை பணியாளர்களும் பட்டாசுகள் வெடித்து யானைகளை பரண் நோக்கி விரட்டினர். பரண் அருகே வந்த யானை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டு மருத்துவர்களும் அடுத்தடுத்து மயக்க ஊசிகளை செலுத்தினர். மயக்கமடைந்த யானை சங்கர் சிறது தூரம் ஓடி நின்றது. பின்பு தயாராக இருந்த கும்கி யானைகள் அருகில் இருந்த மற்ற யானைகளை விரட்டி அடித்தது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட யானை பாகன்கள் சங்கரை கயிறு மூலம் கட்டி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் 5 கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் யானையை லாரியில் ஏற்றிச்சென்று முதுமலையில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்