தேஜஸ் ரயில் இனி திண்டுக்கலில் நிற்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தேஜஸ் ரயில் இனி திண்டுக்கலில் நிற்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
தேஜஸ் ரயில் இனி திண்டுக்கலில் நிற்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில் ஏப்ரல் முதல் திண்டுக்கலில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மதுரை இடையேயோன தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் தேஜஸ் விரைவு ரயில் அங்கு நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில், திண்டுக்கலில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் கடந்த 19 ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. அந்த கோரிக்கையின்படி, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து, அடுத்த ஆறு மாதத்திற்கு தேஜஸ் ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ தேஜஸ் ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் முதல் திண்டுக்கலில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com